நத்தார் என்பது இன, மதங்களை கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு விழாவாக இருக்கும் போது ஒரு கிறிஸ்தவனாக எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கடந்த சில ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் விழாவை சிறப்பிக்க பலதிட்டங்கள். நண்பர்களை விழாவிற்கு அழைத்தமை, அனைவருக்கும் பரிசுகளை பொதி செய்தமை, அனைவரையும் கவரும் வகையில் பலவித உணவுகளை தயார் செய்தமை ஆகியவை இவாண்டில் விழாவை மெருகூட்டிய விடயங்களாகும்.
இவை எல்லாவற்றிட்கும் மேலாக இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்கள், விழா சிறப்பாக நடைபெற பக்கபலமாக இருந்த என் குடுபத்தினர் மற்றும் சுதா அண்ணா, லினேஷ் அனைவருக்கும் தர்ஷனின் அன்பு கலந்த நன்றிகள்.







